
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மே 7-ம் தேதி காலை 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அடிக்கல் நாட்டு விழா சிறப்பு யாக பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் பல்வேறு கலைநயங்கள் கொண்ட வேலைபாடுகளுடன் கூடிய நினைவு மண்டபத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. இந்த நினைவு மண்டபமானது ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.