அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 

காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துவதாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :8 மே 2018, 2:36 pm

DIN

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துவதாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க திமுக தரப்பில் அனைத்துக்கட்சி கூட்டம் செவ்வாயன்று நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. செவ்வாய் காலை உச்ச நீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்து மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் திட்டமிட்டபடி மாலை நடைபெற்றது.

அப்பொழுது காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துவதாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டம் நிறைவு பெற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

அனைத்துக்கட்சி கூட்டத்தில்  நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி வழக்கில் மே 14-ம் தேதி நல்ல முடிவு வரவில்லை என்றால், மீண்டும் மே 15-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதன்பிறகு என்ன வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன.

கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் கோரிக்கை குறித்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.