டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை (செவ்வாய்கிழமை) தூத்துக்குடி செல்கிறார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் எதிர்வலையை கிளப்பியது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கபட்டது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்தனர். 

தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளாக தமிழகத்தில் முதன்முறையாக இணையதளம் முடக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டமே மூன்று நாட்களுக்கு முற்றிலுமாக முடங்கியது. இது போன்ற பதற்றமான சூழல் படிப்படியாக குறைந்த நிலையில், 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அரசு சார்பாக முதன்முதலாக அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார். 

இந்த வரிசையில் இன்று காலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். 

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார். அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூற இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.