சென்னை: கச்சநத்தம் படுகொலைகளில் கொல்லப்பட்டு உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிவகங்கையை அடுத்துள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், கடந்த திங்கள்கிழமை இரவு, குறிப்பிட்ட பிரிவினர், மற்றொரு பிரிவைச் சேர்ந்த 9 பேரை வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டினர்.
இதில், சண்முகநாதன், மருது மற்றும் ஆறுமுகம் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களது உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை மாலை வரை பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்காமல் கிராமத்தினர், உறவினர்கள், மற்றும் தலித் அமைப்புகளைச் சேர்ந்த பலர் திரளாக கூடி, நிபந்தனைகளை வலியுறுத்தி மதுரையில் கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இக்கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆவரங்காடு, கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த 5 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில் கச்சநத்தம் படுகொலைகளில் கொல்லப்பட்டு உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அதனை ரூ.15 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



