கேரளாவில் பந்த்: 43 பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

கேரளாவில் இன்று பந்த் கடைபிடிக்கப்பட்டதால், தமிழக எல்லையான குமரி மாவட்டத்தின் களியக்காவிளையில் கேரள மாநிலத்துக்கு செல்லும் 43 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
கேரளாவில் பந்த்: 43 பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
Updated on
1 min read

கேரளாவில் இன்று பந்த் கடைபிடிக்கப்பட்டதால், தமிழக எல்லையான குமரி மாவட்டத்தின் களியக்காவிளையில் கேரள மாநிலத்துக்கு செல்லும் 43 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கருத்தில் கொண்டு ஒருசில பெண்கள் கோயிலில் தரிசனம் செய்ய முற்பட்டு வருகின்றனர். இதனால், கேரள மாநிலம் முழுவதும் இன்று போராட்டங்கள் அரங்கேறியது. 

இதைத்தொடர்ந்து, கேரளாவில் இன்று பந்த் கடைபிடிக்கப்பட்டதால் கேரள மாநிலத்துக்கு செல்லும் 43 பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com