புது தில்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக மூன்று நிரந்தர நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் ஆர்.எம்.டி டீகா ராமன், என்.சதீஷ் குமார் மற்றும் என்.சேஷசாயீ ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நவம்பர் 2016 -இல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிளாக நியமிக்கப்பட்ட இவர்கள் மூவரின் பதவிக்காலமானது வரும் நவம்பர் 15-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
இவர்கள் மூவரின் பெயர்களும் ஒரு மனதாக கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஆக. 14 - 20) - கும்பம்

வார பலன்கள் (ஆக. 14 - 20) - மகரம்

வார பலன்கள் (ஆக. 14 - 20) - தனுசு

வார பலன்கள் (ஆக. 14 - 20) - விருச்சிகம்
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



