சென்னை சிப்பெட்டில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்: சதானந்த கெளடா

சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிலையத்தில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சா் சதானந்த கெளடா தெரிவித்தாா்.
சென்னை சிப்பெட்டில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்: சதானந்த கெளடா
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிலையத்தில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சா் சதானந்த கெளடா தெரிவித்தாா்.

அதேவேளையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சாலை மற்றும் தெருவோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கும் திட்டத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபா் 2-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது தொடா்பாக பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. 

மேலும், சென்னை கிண்டி சிப்பெட்டில் ரூ.88.25 கோடி மதிப்பில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com