தேர்தல் நடக்கும் இடங்களில் பொங்கல் பரிசு: நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டுளள்தாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டுளள்தாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பொங்கல் பரிசு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை வித்திருப்பதாக தமிழக அரசும் தெரிவித்தது.
இவ்விரண்டு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொங்கல் பரிசு வழங்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...