டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேர்தல் நடக்கும் இடங்களில் பொங்கல் பரிசு: நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டுளள்தாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

News image
சென்னை உயர் நீதிமன்றம்
Updated On :20 டிசம்பர் 2019, 12:32 pm

DIN


சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டுளள்தாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பொங்கல் பரிசு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை வித்திருப்பதாக தமிழக அரசும் தெரிவித்தது.

இவ்விரண்டு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொங்கல் பரிசு வழங்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.