தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்துக்கு அள்ளிக் கொடுத்த வடகிழக்குப் பருவமழை: வானிலை மையம்

தமிழகத்துக்கு இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாகவே அள்ளிக் கொடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2019, 7:36 am

DIN


சென்னை: தமிழகத்துக்கு இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாகவே அள்ளிக் கொடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 1ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இன்று வரை தமிழகத்துக்கு 3 விழுக்காடு மழை அதிகமாக பெய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதாவது, தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவு என்பது 44 செ.மீ. என்ற நிலையில், இன்று வரை 45 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 3 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவ மழையானது 17% குறைவாகப் பெய்துள்ளது. எனினும், இதுவும் இயல்பான அளவாகவேப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை 19% அளவுக்குக் குறைவாக பெய்திருந்தால், சென்னையில் மழை பற்றாக்குறையாக பெய்திருப்பதாகக் கருத்தில் கொள்ளப்படும்.

மழை குறைவாக பெய்த மாவட்டங்களின் பட்டியலில்  புதுச்சேரி - 37%, பெரம்பலூர் 28%, வேலூர் - 26% ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.