3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விவேகானந்த கேந்திரத்தில் குடியரசுத் தலைவர் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடல்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  விவேகானந்த கேந்திரத்தில் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

News image
Updated On :26 டிசம்பர் 2019, 9:42 am

DIN

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விவேகானந்தரின் குமரி வருகை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே  வியாழக்கிழமை உரையாடினார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை கன்னியாகுமரி வந்தார். தனிப்படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

Story image

இரண்டாம் நாளான வியாழக்கிழமை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காலை 9.45 மணிக்கு விவேகானந்த கேந்திரம் சென்றார். அங்கு அவரை கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடம், பாரதமாதா கோவில் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் விவேகானந்தரின் குமரி வருகை குறித்து கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, கேந்திர நிர்வாகம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. காலை 10.40 மணிக்கு கேந்திரத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.