காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத பி.டெக். மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐஐடி-யும், காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் நிறுவனமும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஐஐடிடிஎம் நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சிறந்து விளங்கும் முதல் 10 சதவீத மாணவர்கள் அவர்களுடைய 6 ஆம் பருவத் தேர்வுக்குப் பிறகு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பிறகு அவர்கள் பி.டெக். படிப்புக்கான 7 ஆம் பருவம், 8 பருவத் தேர்வுகளை சென்னை ஐஐடி-யில் முடித்துக்கொள்ள முடியும்.
அதோடு, இரு நிறுவன ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சி, கல்வித் திட்டங்களிலும் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
பெரும்பான்மையை நிரூபிக்க அசிங்கமான அரசியல் செய்த தவெக! -டிடிவி தினகரன்

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
