தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் , மார்ச் 8 ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் மதகுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சேதமடைந்த பகுதியை அந்த மாதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, அணை உடைந்ததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் எனவும், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்தும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது அரசு வழக்குரைஞர் பி.சம்பத்குமார் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.குமரகுரு முன்னிலையில் புதன்கிழமை வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான மு.க. ஸ்டாலின் தரப்பு வழக்குரைஞர்கள், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சட்டப் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதால் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினர். மேலும், வழக்கை சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றவும் முறையீடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்குரைஞர் சம்பத்குமார், கடந்த முறை விசாரணையின்போதும் மு.க. ஸ்டாலின் ஆஜராகவில்லை. இந்த முறையும் ஆஜராகவில்லை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். குமரகுரு, வழக்கு விசாரணைக்காக வரும் மார்ச் 8ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அதன் பிறகே வழக்கை சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெற விளைநில விவரங்களை மே 20-க்குள் பதிவு செய்யலாம்

திருத்தணி அரசு கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மேல்நிலை தொட்டிகளை தூய்மைப்படுத்தி குடிநீா் விநியோகம்: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
