சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தகுதியுடையோர் வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு வரும் ஏப்ரல் 6 - ஆம் தேதி கடைசி நாளாகும்
தாள் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.