ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சந்தேகமேயில்லை! வட தமிழகத்துக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னடா இப்படி வெயில் கொளுத்தி வருகிறது, ஆனால் வட தமிழகத்துக்கு இன்று அதிர்ஷ்டமான தினம் என்கிறார்களே என்று பார்க்க வேண்டாம். நாங்கள் சொல்லவில்லை தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்.

News image
Updated On :13 ஜூலை 2019, 8:51 am

DIN


என்னடா இப்படி வெயில் கொளுத்தி வருகிறது, ஆனால் வட தமிழகத்துக்கு இன்று அதிர்ஷ்டமான தினம் என்கிறார்களே என்று பார்க்க வேண்டாம். நாங்கள் சொல்லவில்லை தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், எந்த சந்தேகமும் இல்லாமல், இன்று வட தமிழக மாவட்டங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள்தான். 

தெற்கு சென்னைப் பகுதிகளும் கூட இன்று மழையைப் பெறும். அடுத்த 3 நாட்கள் மிகவும் சிறப்பான நாட்களாகக் காட்சியளிக்கின்றன. அந்த 3 நாட்களையும் பார்க்கும் போது இன்று அவ்வளவு இனிமையான நாளாக தெரியவில்லை. 

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை மழை பெய்யும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். தலைக்கு மேல் இருக்கும் மேகக் கூட்டங்களும், கடுமையான வெப்பமுமே இதற்குக் காரணம். இன்று மாலை நேரத்தில் லேசான தூறலுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அது தவறிவிட்டால் இன்று இரவு தூறலுக்கான வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு வெப்பச் சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது கடுமையான வெயிலை உணர முடிகிறது. இதுவும், வானத்தில் திரியும் மேகங்களும் உள் மாவட்டங்களில் ஒன்றாக சேர்ந்து நள்ளிரவில் மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

இம்மூன்று மாவட்டங்களிலும் இன்று இரவு முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு செம பிரகாசமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.