சென்னை: காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசும்போது, 'காவல்துறையினர் கோரிக்கைகளுக்காக ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்' என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக காவல் துறையினர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இதே போல் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.