இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வட தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2019, 7:19 am

DIN


சென்னை: வட தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து கர்நாடக பகுதிகளில் வலுவாக உள்ளது. 

நேற்று தமிழகப் பகுதிகளில் நிலவி வந்த வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
கன மழையைப் பொருத்தவரை..

வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்.. அதிகபட்சமாக 
திருப்புவனம் - 9 செ.மீ.
ஆரணி மற்றும் திருப்பத்தூரில் தலா - 8 செ.மீ.
உத்திரமேரூர் - 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை  மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளி விட்டு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கடந்த ஜூன் 1 முதல் நேற்று வரையிலான கால கட்டத்தில் பெய்திருக்கும் மழையின் அளவானது 89 மி.மீ. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 117 மி.மீ. இது 24 சதவீதம் குறைவு. 

பற்றாக்குறை மழை குறைவாகவே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த பற்றாக்குறையும் குறைந்து வருகிறது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.