அந்த மனுவில், 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு மனு கொடுத்துள்ளேன். மார்ச் மாதம் எனக்கு பரோல் கேட்டு என் தாயார் பத்மா, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
இந்த வழக்கில் நானே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட விரும்புவதால், உயர்நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்த சிறைத்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நளினியின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.