சென்னைப் புறநகர் பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் பணியில் இருக்கும் வட இந்திய பணியாளர்கள் மொழிப்பிரச்சினை காரணமாக தவறாக ஊர்களுக்கு பயணச்சீட்டு தருவது வாடிக்கையாகி விட்டது. வட இந்திய பணியாளர்களுக்கு தமிழ் கற்றுத் தருவதன் மூலமாகவே இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமே தவிர, தொடர்வண்டியில் பயணம் செய்யும் அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இதே வாதம் தொடர்வண்டி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் பொருந்தும். மாறாக, மாநில மொழிகளைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலமும், இந்தியும் தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தெற்கு தொடர்வண்டித்துறையில் தமிழர்களை வெளியேற்றிவிட்டு, முழுக்க முழுக்க இந்தி பேசும் வட இந்தியர்களை நியமிப்பதற்கே வழி வகுக்கும். இது ஆபத்தானது.