தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 - ல் மக்களவைத் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 - ல் மக்களவைத் தேர்தல்
Published on
Updated on
1 min read

புது தில்லி: தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று தில்லியில் வெளியிட்டார்.

அதன்படி நாடு முழுவதும் எழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டாவது கட்டத்தில் தேர்தல்  நடைபெற உள்ளது.

அவரது அறிவிப்பின்படி தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவனை விபரங்கள் வருமாறு:

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள்:           19.03.2019

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்:        26.03.2019

வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள்:          27.03.2019

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: 29.03.2019  

வாக்குப் பதிவு:                                                                          18.04.2019

வாக்கு எண்னிக்கை நடைபெறும் நாள்:                 23.05.2019       

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com