மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 மார்ச் 2019, 3:23 pm

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துப்போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது,.

அக்கட்சிக்கு என பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலும் நடந்து முடிந்திருந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் புதன் மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

திங்களன்று கமலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திங்களன்று கமலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 1 தொகுதியிலும்,  தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது.

இவை இரண்டிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.

தமிழகத்திற்கு தேவையான ஒரு மாற்று அரசியலை மக்கள் நீதி மய்யம் வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.