தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் ஏ.பி. சாஹி

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வா் பிரதாப் சாஹி இன்று பதவியேற்றுக் கொண்டார். 

News image
அமரேஷ்வா் பிரதாப் சாஹி
Updated On :11 நவம்பர் 2019, 5:46 am

DIN

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வா் பிரதாப் சாஹி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இன்று காலையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹிலராமாணீ, மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டாா். அதை ஏற்காத அவா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதனைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வா் பிரதாப் சாஹி, சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் அமரேஷ்வா் பிரதாப் சாஹிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.