மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் திட்டம்?

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி கேஎஸ் அழகிரி பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2019, 3:03 pm IST

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி கேஎஸ் அழகிரி பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் எம்.பி.யாகி விட்டதால் அந்த தொகுதி காலியானது. விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலி இடமானது. 

எனவே, காலியாக உள்ள இந்த 2 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட திட்டமிட்டு வருகிறது. ஆனால் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த தொகுதியை தி.மு.க.விடம் இருந்து பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி கேஎஸ் அழகிரி பங்கேற்ற கூடடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.