குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

95 ஆண்டுகளுக்குப் பிறகு வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரெங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் 95 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

News image

கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.

Updated On :13 செப்டம்பர் 2019, 7:27 pm


நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரெங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் 95 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
வடரெங்கத்தில் ரெங்கநாதப் பெருமாள் கோயில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள இந்த ரெங்கநாத பெருமாள் கோயில் மண்டபம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணாமியன்று தீர்த்தவாரி நடைபெற்று வருவது வழக்கம். 
இந்நிலையில், கடந்த 1924-ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, அப்பகுதியிலிருந்த கோயிலின் பெரும்பகுதியும் குடியிருப்புகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும் கோபுரம் மட்டும் கம்பீரமாக இன்னும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 
இந்த கோபுரத்துக்குள் வசிஸ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிருஷ்ணன் சிலை தற்போதும் உள்ளது. 1924-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த கோபுரம் பூட்டப்பட்டது. இந்நிலையில், ரெங்கநாதர் கோயில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இருப்பினும், இக்கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரி விழா மட்டும் தடைபட்டிருந்தது. இந்நிலையில், 95 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையால் வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது. 
விழாவையொட்டி, காலை மூலவர் மற்றும் உத்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாதப் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 
இதில், கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் ரெங்கநாதப் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  95 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணி பௌர்ணமி விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரியால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.