நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

95 ஆண்டுகளுக்குப் பிறகு வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரெங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் 95 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.

Published On :31 ஜனவரி 2024, 3:35 pm IST


நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரெங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் 95 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
வடரெங்கத்தில் ரெங்கநாதப் பெருமாள் கோயில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள இந்த ரெங்கநாத பெருமாள் கோயில் மண்டபம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணாமியன்று தீர்த்தவாரி நடைபெற்று வருவது வழக்கம். 
இந்நிலையில், கடந்த 1924-ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, அப்பகுதியிலிருந்த கோயிலின் பெரும்பகுதியும் குடியிருப்புகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும் கோபுரம் மட்டும் கம்பீரமாக இன்னும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 
இந்த கோபுரத்துக்குள் வசிஸ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிருஷ்ணன் சிலை தற்போதும் உள்ளது. 1924-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த கோபுரம் பூட்டப்பட்டது. இந்நிலையில், ரெங்கநாதர் கோயில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இருப்பினும், இக்கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரி விழா மட்டும் தடைபட்டிருந்தது. இந்நிலையில், 95 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையால் வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது. 
விழாவையொட்டி, காலை மூலவர் மற்றும் உத்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாதப் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 
இதில், கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் ரெங்கநாதப் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  95 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணி பௌர்ணமி விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரியால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.