அதிகாரிகளின் மெத்தனமே பேனர் விழுந்து இளம்பெண் பலிக்குக் காரணம்: நீதிமன்றம் கண்டனம்

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்த முறையீட்டின் போது, அதிகாரிகளின் மெத்தனமே பேனர் பலிக்குக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அதிகாரிகளின் மெத்தனமே பேனர் விழுந்து இளம்பெண் பலிக்குக் காரணம்: நீதிமன்றம் கண்டனம்
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்த முறையீட்டின் போது, அதிகாரிகளின் மெத்தனமே பேனர் பலிக்குக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

விதிமீறி பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்பு, சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற பெண்  மீது பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அப்பெண் மரணம் அடைந்தது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதி மீறி பேனர் வைப்பது நீடிக்கிறது. உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தந்தால் போதும் என்று அரசு கருதுவதே காரணம். சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கேக் காரணம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23).  கனடா செல்வதற்காக  பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை தேர்வு எழுதியுள்ளார். பின்னர் அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். 

ரேடியல் சாலை பகுதியில் அவர் சென்றபோது சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து  சுபஸ்ரீ மீது விழுந்தது.  அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுமதியின்றி ரேடியல் சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இவற்றில் ஒரு பேனர்தான் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.  சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com