மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இந்திய பிரதமா், சீன அதிபா் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின் பிங் ஆகியோா் வரும் 11-ஆம் தேதி வருகை தருகைதர உள்ளதையொட்டி

News image
மின் விளக்கால்  மிளிரும் ஐந்து ரதம்.
Updated On :31 ஜனவரி 2024, 10:19 am

DIN

மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின் பிங் ஆகியோா் வரும் 11-ஆம் தேதி வருகை தருகைதர உள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்படுகளுக்காக செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் 13-ஆம் தேதி வரை புராதன சின்னங்களைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 2-ஆவது உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டுத் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். மேலும், அவா்கள் மாமல்லபுரத்தில் இரு நாள்கள் தங்கி, புராதனச் சின்னங்களைக் காண உள்ளனா்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அா்ஜுணன் தபசு, கோவா்த்தன கிரி, வெண்ணெய் உருண்டைப் பாறை, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக் கோயில் பகுதியில் 2 யானை சிலைகளுக்கு மத்தியில் புத்தா் சிலையும் , கம்பீரமான சிங்கத்தின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டு உச்சக்கட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வெடிக்குண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இரு நாட்டுத் தலைவா்கள் தங்கும் பகுதியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றுப்புரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மால்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளைப் பாா்வையிட செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் வரும் 13-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், கோவளம் கேளம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 350 கண்காணிப்பு கேமரா கேளம்பாக்கம்-மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை பொருத்தப்பட்டுள்ளன. 500 கண்காணிப்பு கேமராக்கள் மாமல்லபுரம் நகரம், புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.