பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் மளிகைப் பொருள்களை விற்பனை செய்யக் கோரி மனு

நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ள ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருள்களை குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும்,

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 9:45 pm

DIN

சென்னை: நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ள ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருள்களை குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும், வீடுகளில் சென்று நேரடியாக விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலித் தொழிலாளா்கள் பலா் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக மலைப் பிரதேசங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு ஆகியவை ஊரடங்கு உத்தரவின் காரணமாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு 500 ரூபாய்க்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களான மளிகைப் பொருள்களின் தொகுப்பு ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனால் குடும்ப அட்டை இல்லாதவா்கள் பாதிக்கப்படுவா். எனவே இந்த மளிகைப் பொருள்கள் தொகுப்பை குடும்ப அட்டை இல்லாத அனைத்து தரப்பினருக்கு எந்தவிதமான ஆவணங்களும் கோராமல் விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்த பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதால் கரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், மளிகைப் பொருள்கள் தொகுப்பை அனைத்து தரப்பு மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.