தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா
தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 பேர்.
இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்று ஊருக்குத் திரும்பிய அம்மாபேட்டையைச் சேர்ந்த 51 வயது நபரின் 28 வயதுடைய மகன், 21 வயதுடைய மருமகள், 8 மாத பேத்தி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இதேபோல, தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அதிராம்பட்டினம் நபரின் 20 வயது மகனுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...