தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா

தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 2:44 pm

DIN

தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இருவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 பேர்.

இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்று ஊருக்குத் திரும்பிய அம்மாபேட்டையைச் சேர்ந்த 51 வயது நபரின் 28 வயதுடைய மகன், 21 வயதுடைய மருமகள், 8 மாத பேத்தி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

இதேபோல, தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அதிராம்பட்டினம் நபரின் 20 வயது மகனுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.