கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனி மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று நீங்கி விடுவிப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில்

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 1:19 pm

DIN

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 18 பேர் கரோனா தொற்று நீங்கி வியாழக்கிழமை, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களிலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற இஸ்லாமியர் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட மொத்தம் 41 பேருக்கு முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இவர்களுக்கு 2-ம் கட்டமாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 4 பேர், போடியைச் சேர்ந்த 8 பேர், பெரியகுளத்தைச் சேர்ந்த 3 பேர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 18 பேருக்கு கரோனா தொற்று நீங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலா 3 பேருக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் 6 வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரோனா தொற்று நீங்கி விடுவிக்கப்பட்ட 18 பேரும் 14 நாட்கள் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுலர்கள் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.