மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆம்பூர் அருகே மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கிய ராணுவ வீரர்கள்

ஆம்பூர் அருகே உள்ளது வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பள்ளி கிராமம். இந்த கிராமம் மற்றும் அருகே உள்ள

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 8:12 am

DIN

ஆம்பூர் அருகே உள்ளது வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பள்ளி கிராமம். இந்த கிராமம் மற்றும் அருகே உள்ள ராள்ளக்கொத்தூர் கிராமங்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த இருளர் இன குடும்பங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. 

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இந்த மலை வாழ் மக்கள் அன்றாட தேவைகளுக்கு இப்போது அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அறிந்த
ஆம்பூர் ஜவான்ஸ்(Ambur jawans) குழுவினர் மற்றும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்களும் ஒன்றிணைந்து ஆம்பூர் பகுதியில் உள்ள இந்த மலை வாழ் மக்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

இந்த இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மௌலி குமார்(ஏ) திவாகரன் (தேவலாபுரம்), ஜனா (காரப்பட்டு) ,தினேஷ் (தேவலாபுரம் ), ராம்குமார் (நாச்சியார் குப்பம் ), கோகுல் (ஆம்பூர்),நவீன்  (கதவாளம்), மற்றும் பல நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 50 ராணுவ வீரர்கள் இந்த குழுவில் உள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.