அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீர்காழியில் மது அருந்தும் இடமாக மாறிய பொதுக் கழிப்பிடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழி நகராட்சியில் மது அருந்துபவர்களின் கூடாரம் ஆகிய  10 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன கழிவறையை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
மதுக்கூடாரமாகிய பொதுக்கழிப்பிடம்
Updated On :1 ஆகஸ்ட் 2020, 9:53 am

DIN

சீர்காழி நகராட்சியில் மது அருந்துபவர்களின் கூடாரம் ஆகிய  10 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன கழிவறையை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட  அகரதிருகோலகா பகுதியில் 500 க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் போதிய கழிப்பறை வசதி இல்லை.எனவே பொது கழிவறை வசதி வேண்டி இப்பகுதி மக்கள் நீண்ட கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு நம்ம டாய்லெட் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பிட்டில் நவீன வசதிகள் கொண்ட இரண்டு கழிவறை மற்றும் இரண்டு குளியலறை கொண்ட கட்டிடம்  சீர்காழி நகராட்சியால் கட்டபட்டது.ஆனால் 7 ஆண்டுகளை கடந்தும் இதுவரை கழிவறைகள் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கபடவில்லை.

இது குறித்து பலமுறை சீர்காழி நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை திறக்க எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. மேலும் கழிவறை கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் உடைத்தும் தரைகள் சேதமடைந்து கருவேலம் காட்டுக்கு நடுவே வீணாகி புதர்கள் மண்டி காணப்படுகிறது.எனவே எழை எளிய மக்களுக்காக கட்டபட்ட நவீன கழிவறையை சீரமைத்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அகதிருகோலகா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.