நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி
கேரள நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.


கேரள நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மீட்புப்பணிக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...