ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஜாதகம் பார்ப்பதற்காக கணவருடன் சென்ற மனைவி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். கணவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தியூர் அருகேயுள்ள குருவரெட்டியூர், அஞ்சலக வீதியை சேர்ந்தவர் சதாசிவம் (56). இவரது மனைவி ஆதிலட்சுமி (52). இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பட்லூர் - பவானி சாலையில் ஒலகடம் வழியாக சென்று கொண்டிருந்தனர். குட்டைமேடு அருகே சென்றபோது, அதிவேகமாக பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், பலத்த காயமடைந்த ஆதிலட்சுமி, கணவன் கண்ணெதிரிலேயே உயிரிழந்தார். சதாசிவம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


