சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புரெவி புயல்: வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் 20 செ.மீ மழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

News image
வாய்மேடு பகுதியில் விளை நிலத்தில் தேங்கி வடியும் மழை நீர் .
Updated On :3 டிசம்பர் 2020, 6:19 am

DIN

வேதாரண்யம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 20 செ.மீ மழை பதிவானது. 

புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் பாதிப்பு இருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய காற்று புதன்கிழமை இரவு படிப்படியாக அதிகரித்து இரவு முழுதும் தொடர்ந்தது.

ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட தாழ்வான கிராமங்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.

தாழ்வான விளை நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து வருகிறது. மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.