தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புரெவி புயல்: வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் 20 செ.மீ மழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

News image

வாய்மேடு பகுதியில் விளை நிலத்தில் தேங்கி வடியும் மழை நீர் .

Updated On :3 டிசம்பர் 2020, 6:19 am

வேதாரண்யம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 20 செ.மீ மழை பதிவானது. 

புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் பாதிப்பு இருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய காற்று புதன்கிழமை இரவு படிப்படியாக அதிகரித்து இரவு முழுதும் தொடர்ந்தது.

ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட தாழ்வான கிராமங்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.

தாழ்வான விளை நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து வருகிறது. மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.