இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

‘புரெவி’ புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

‘புரெவி’ புயல் எதிரொலியால், தென் மாவட்டங்களுக்கான விமான சேவை வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :3 டிசம்பர் 2020, 5:01 am

DIN

‘புரெவி’ புயல் எதிரொலியால், தென் மாவட்டங்களுக்கான விமான சேவை வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தென்மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் தீவிரமடைந்து வருவதால் வியாழக்கிழமை காலை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமானங்களின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.