பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாளை கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். 

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :7 டிசம்பர் 2020, 8:40 am

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். 

முன்னதாக புயல் காரணமாக பெய்த கனமழையால் கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக ‘புரெவி’ புயலால் பெய்த பலத்த மழையால் கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி நேரடியாக நாளை கடலூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.