அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
புதிய கட்சி தொடங்கப்படவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


புதிய கட்சி தொடங்கப்படவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார்.
தொடர்ந்து, நேற்று பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார். இதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று பெங்களூருவுக்குச் சென்ற ரஜினி, அங்கிருந்து ஹைதராபாத் சென்று 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், ரஜினி திடீரென சென்னை திரும்பியதுடன் கட்சி தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கட்சி தொடர்பான போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடக்கூடாது என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...