பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு 

தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2020, 4:25 am

DIN


சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
 
புரெவி புயல் காரணமாக, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், கடலூர், நாகை மாவட்டத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி நேற்றுமுதல் புயல் காரணமாக பாதிகப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 

இந்நிலையில், தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நிவர் புயலால் சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை சீர் செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.