சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.
அமைச்சரவையின் முடிவை, துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். கடந்த 2016 -2017 ஆம் ஆண்டிலிருந்து அரசு பள்ளியில் படித்த 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தனியார் பள்ளியில் படித்த மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.