இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தினமணி இணையதள செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் நில வரித் திட்டத்திற்கு வட்டாட்சியர் நியமனம் 

கூத்தாநல்லூர் நகராட்சியில் நகர நிலவரித் திட்ட அலகு தொடங்குவதற்காக, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்

News image
தினமணி இணையதள செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் நில வரித் திட்டத்திற்கு வட்டாட்சியர் நியமனம் 
Updated On :29 டிசம்பர் 2020, 6:43 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நகர நிலவரித் திட்டம் கொண்டு வர வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி, தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. 

அச்செய்தியின் எதிரொலியாக, நகர நிலவரித் திட்ட அலகு தொடங்குவதற்காக, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து, நிலவரித் திட்ட அதிகாரி கூறியது. கூத்தாநல்லூர் நகராட்சியில், நிலவரித் திட்டப் பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதின்படி, வட்டாட்சியர், சார் ஆய்வாளர், நில அளவர் மற்றும் உதவியாளர்கள் என 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். 

நகராட்சியில் உள்ள 24 வார்டுகளும் 4 வார்டுகளாகப் பிரிக்கப்படும். அதனடிப்படையில், ராமனாதன் கோயில், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் மற்றும் பண்டுதக்குடி என பிரிக்கப்பட்டுள்ளன. ராமனாதன் கோயில் 22, லெட்சுமாங்குடி 17, கூத்தாநல்லூர் 40 மற்றும் பண்டுதக்குடி 20 என 99 பிளாக்குகள் உள்ளன. 

திங்கள்கிழமை முதல், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டா இல்லாமல் இருப்பவர்கள் என நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் வசிக்கும் அனைவருக்கும், வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, பிளாக் வாரியாக அழைத்து, ஆய்வு செய்யப்படும். பத்திரம், பட்டா உள்ளிட்ட அனைத்தையும் விசாரித்து, அதற்கேற்றபடி பட்டா வழங்கப்படும். இந்தப் பணிகள் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் நடைபெறும். தற்போது மன்ப உல் உலா தொடக்கப் பள்ளியில் உள்ள இந்த அலுவலகம் தற்காலிகமானதுதான். பொதுமக்களின் வசதிக்கேற்றப்படி மாற்று இடம் கிடைத்தவுடன் அலுவலகம் மாற்றப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.