டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

News image
வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
Updated On :18 டிசம்பர் 2020, 7:27 am

DIN


திருப்பூர்: வேளாண் சட்ட திருத்தங்களைத் திரும்பப்பெறக்கோரி தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

தாராபுரம் அண்ணாசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நா.தமிழ்முத்து தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: தில்லியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக கடுமையான குளிரையும் பொருள்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரித்தும், விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் தனபால்,. காங்கயம் நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.