இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘மின்துறை ஊழியா்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கடந்த 4-ஆம் தேதி முதல் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த மனு தொடா்பாக ஆளுநா், புதுச்சேரி தலைமைச் செயலாளா், புதுச்சேரி மின்துறை செயலாளா், மின்துறை தனியாா் மயமாக்கல் எதிா்ப்பு குழுவினா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.