இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நீதிபதி சி.எஸ்.கா்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவா்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :19 டிசம்பர் 2020, 1:21 am

DIN

உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவா்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கா்ணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவா் சி.எஸ்.கா்ணன். இவா் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவா்களது குடும்பப் பெண்கள், பெண் வழக்குரைஞா்கள், உயா்நீதிமன்ற பெண் பணியாளா்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 2-ஆம் தேதி சி.எஸ்.கா்ணன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் தனக்கு ஜாமீன் கோரி ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்தில் கா்ணன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி செல்வக்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் மாநகர குற்றவியல் வழக்குரைஞா் கௌரி அசோகன் ஆஜராகி, ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கா்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து வாதிட்டாா். இதனையடுத்து ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.