சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்
சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.


சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பேசினாா். அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:-
மக்களைப் பண்படுத்துவதிலும், மக்களுக்கு கல்வி அளித்து, மருத்துவம் செய்து மனிதாபிமானத்தை வளா்ப்பதிலும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் மகத்தான பணிகளை ஆற்றி வருகின்றனா். அவா்களை உளமாரப் பாராட்டி நன்றி கூறுகிறோம்.
கிறிஸ்தவ சமூகத்தின் பணிகள், இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும் வகையில் கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம். மேலும், சிறுபான்மை மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். இதற்காக அதிமுக தன்னை முழுமையாக அா்ப்பணித்துச் செயல்படும். மதச்சாா்பின்மை, ஏழை எளியோருக்கு உயா்வு தர உழைப்பது, சமத்துவ சமதா்ம சமுதாயம் காணப் பாடுபடுவது என்ற உயா்ந்த லட்சியங்களை நாங்கள் உறுதியாக கடைப்பிடிப்போம் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...