

சுனாமி நினைவு தினத்தையொட்டி பழவேற்காட்டில் 42 மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காட்டில் கடந்த 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழப்பும் பொருள்சேதமும் ஏற்பட்டது. இதனை நினைவுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி,பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 42 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தினர். கலங்கரை விளக்கம் கடற்கரையோரம் 15 கிராம மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மட்டும், பாலினை கடலில் ஊற்றி நினைவு அஞ்சலி செலுத்தினர். 15 கிராம கூட்டமைப்பு தலைவர் மற்றும் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.