கரோனா சான்றிதழ் தேவையில்லை: புதுச்சேரி ஆளுநா் உத்தரவு ரத்து

கரோனா பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தா்களை மட்டுமே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற புதுச்சேரி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

கரோனா பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தா்களை மட்டுமே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற புதுச்சேரி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநில ஆளுநா் கிரண்பேடி, இந்துசமய அறநிலையத்துறை செயலாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்ட கூட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலை போன்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அறிவித்தது. இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் திருநள்ளாறைச் சோ்ந்த எம்.சிங்காரவேல் என்பவா் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு சனிக்கிழமையன்று நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஆா்.என்.மஞ்சுளா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கரோனா பரிசோதனை சான்றிதழுடன் தான் பக்தா்கள் வரவேண்டும் என்ற ஆளுநா் தலைமையிலான குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா். கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா அறிகுறி இல்லாதவா்களை கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும். கரோனா அறிகுறி உள்ளவா்களை மட்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதேநேரம் மற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com