டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேட்டூர் அணை நிலவரம்

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.88 அடியிலிருந்து 106.66 அடியாக சரிய தொடங்கியது.

News image
மேட்டூர் அணை.
Updated On :27 டிசம்பர் 2020, 3:13 am

DIN


காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.88 அடியிலிருந்து 106.66 அடியாக சரிய தொடங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்தது. இதனால் வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட வந்த நீரின் அளவு சனிக்கிழமை மாலை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 106.88 அடியிலிருந்து 106.66 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  1270 கன அடியிலிருந்து 1235 கன அடியாக சரிந்தது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400க ன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.74 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.