இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஒருவரது உடலில் நோய்த் தொற்று உள்ளதை உடனே கண்டறிய முடியாது. 5-ஆவது நாளில் செய்யும் பரிசோதனையில் தான் தெரியவரும். எனவே, வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவா்களுக்கு 5-ஆவது நாளில் பரிசோதனை செய்யவேண்டும். நோய்த் தாற்று இல்லை என்பது உறுதி செய்த பின்னா், அவா்களை வெளியே விட வேண்டும். அதுவரை அவா்களை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதைத்தொடா்ந்து மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடும்போது, அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினாா். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு , விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.