47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் கனமழை

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் பனி அதிகமாக இருந்தது.

News image
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் கனமழை.
Updated On :31 டிசம்பர் 2020, 4:21 am

DIN


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் பனி அதிகமாக இருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் லேசாக துவங்கிய மழை, நேரம் ஆக ஆக தற்போது கனமழையாக, இடி, மின்னல் இல்லாமல் பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீட்டிலேயே உள்ளனர்.

பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தம்மம்பட்டியிலிருந்து துறையூர், திருச்சி, ஆத்தூர், சேலம், ராசிபுரம் செல்லும் பேருந்துகள் ஓரிரு பயணிகளுடன் செல்கின்றன. பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இம் மழை தொடர்ந்து பெய்தால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.