கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்: ஆணையர் பழனிசாமி

தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :4 ஜனவரி 2020, 6:06 am

DIN


சென்னை: தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியார்களை சந்தித்தார்.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 77.46% மொத்த வாக்குகள் பதிவாகின.  ஊரகப் பகுதிகளில் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பல்வேறு காரணங்களுக்காக 25 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 16,570 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

மேலும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக எழுப்பிய புகார்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப்பட்டது. 100க்கு 100% உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்று முடிந்துள்ளது என்று கூறினார்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை நாங்கள் ஏற்க முடியாது. ஏன் என்றால், வாக்காளர் பட்டியலை நாங்கள் தயாரிப்பது இல்லை. அதனை இந்திய தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது. 

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பியதற்கு, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பழனிசாமி பதில் அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.